Showing posts with label aedhaedho ennam. Show all posts
Showing posts with label aedhaedho ennam. Show all posts

Saturday, June 13, 2015

ஏதேதோ எண்ணம் - aedhaedho ennam

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் என்னை கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே 

சிலகாலமாய் நானும் சிறை வாழ்கிறேன் 
உன்னை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன் 
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது 
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது 
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு 

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா 
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா 
நீயே அணைக்கவாதீயை அணைக்கவா 
நீ பார்க்கும் போது பனியாகிறேன் 
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
ஏது வந்த போதும் இந்த அன்பு போதும்