Showing posts with label Ooru vittu ooru vanthu. Show all posts
Showing posts with label Ooru vittu ooru vanthu. Show all posts

Saturday, May 18, 2013

ஊரு விட்டு ஊரு வந்து - Ooru vittu ooru vanthu

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலேதும் நடக்கலையா
வீட்டையும் மறந்து விட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சி கோடி வாசனை பட வேணும்
வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
கன்னிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது