Showing posts with label Poove Poochoodava. Show all posts
Showing posts with label Poove Poochoodava. Show all posts

Saturday, September 1, 2012

பூவே பூச்சூடவா - Poove poochoodava

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா 
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா 

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் 
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் 
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது 
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் 
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் 
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் 

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே 
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே 
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் 
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் 
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும் 
பாச ராகங்கள் பாட வேண்டும்