Showing posts with label Kozhi koovum neram. Show all posts
Showing posts with label Kozhi koovum neram. Show all posts

Saturday, April 27, 2013

கோழி கூவும் நேரம் ஆச்சு - Kozhi koovum neram aachu

வந்தேன் வந்தேன் வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை ஒன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது ஏன் அதில் இன்று
அழகான மணவாளன் காதலின் வசமானாள்
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்
இரவெல்லாம் முதலிரவாக அவர் வாழும் ஒரு நாள் காலையில்
துயில் மேவும் அவள் மணவாளன் தனை மங்கை எழுப்புகின்றாள்

கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம் சொல்லிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி ரெண்டும் உறங்காம சொருகுது சொருகுது

ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள் அம்மா
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே
நெத்திலி மீனே மைவிழி மானே நெஞ்சிலே சாச்சுக்கோ
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

எப்போதும் மீனுண்டு கடலில தான் காதலியே
கடல் எங்கே போய் விடும் சொல்லு
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

காதலி சொன்னது வேதம் என்று
புயல் வரும் வேளையில் அவன் போனான்
இந்திய எல்லையை தாண்டும் போது
பாவிகள் சுட்டதில் பலியானான்
காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்
எனினும் அவள் மனம் நம்பாது
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே தனிமையில் ஆடி சிலையானாள்