Showing posts with label இருபது கோடி நிலவுகள். Show all posts
Showing posts with label இருபது கோடி நிலவுகள். Show all posts

Saturday, June 13, 2015

இருபது கோடி நிலவுகள் - irupathu kodi nilavugal

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்கூசுதோ 

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல யாருமில்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன 
மங்கை உந்தம் பாதம் கண்டு  வணக்கம் சொல்லுதோ 
தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன 
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளுதோ 
மானிட பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு 

ஜூலை மாதம் பூக்கும் கொண்டை பூக்கள் போல 
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே  
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே 
மேனி உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே 
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை 
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை