Showing posts with label அடி பூங்குயிலே பூங்குயிலே. Show all posts
Showing posts with label அடி பூங்குயிலே பூங்குயிலே. Show all posts

Saturday, June 13, 2015

அடி பூங்குயிலே பூங்குயிலே - adi poonguyile poonguyile

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு நூலைப்போல உன் உடம்பு ஆச்சு
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாயவிட்டு போனதென்ன பேச்சு 

ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா 
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா 
மாமன் கையில் பூவை தந்து  சூடிக்கொள்ளவா 
அடி ஆசையென்னும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா 
பொத்தி பொத்தி வெச்சதென்ன என்னனவோ இஷ்டமா 
கூவாம கூவுறியே குக்கூ குக்கூ பாட்டு 
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு -- (யாரிடத்தில்...)

ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தைக்கிளியே 
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே 
சொந்தபந்தம் யாருமின்றி வந்த கிளியே 
ஒரு சொந்தம் இப்போ வந்ததேன்ன வாசல் வழியே 
வேறு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது 
வானம் தொடும் ஆசையிலே மெல்ல மெல்ல பூக்குது
பூப்பூவா பூக்கவேச்ச மாமனவன் யாரு 
பாடுகிற பாட்டுலதான் நீயும் அத கூறு  -- (யாரிடத்தில்...)