Showing posts with label Sorgame endraalum. Show all posts
Showing posts with label Sorgame endraalum. Show all posts

Saturday, May 18, 2013

சொர்கமே என்றாலும் - Sorgame Endraalum

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்க ஏதும் கேக்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பாக்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சு துப்ப ஒரு வழி இல்லையே
ஒடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

மாடு கண்ணு மேய்க்க மேயுறத பாக்க மந்தவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரசமர மேடையில்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூர போல ஊரும் இல்ல