Showing posts with label வா வா அன்பே அன்பே. Show all posts
Showing posts with label வா வா அன்பே அன்பே. Show all posts

Tuesday, June 30, 2015

வா வா அன்பே அன்பே - vaa vaa anbe anbe

வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம் 
இதயம் முழுதும் எனது வசம்

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் 
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி 
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி 
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி 
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் 
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே 
நீயின்றி ஏது பூவைத்த மானே 
இதயம் முழுதும் எனது வசம் 

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் 
காதல் அல்ல காதல் என்னும் காவியம் 
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் 
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது 
உன் தோளில் தானே பூமாலை நானே 
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்