Showing posts with label Chandrinai thottadhu yaar. Show all posts
Showing posts with label Chandrinai thottadhu yaar. Show all posts

Monday, April 22, 2013

சந்திரனை தொட்டது - Chandiranai thottadhu yaar

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான் தானே அடி நான் தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான் தானே

சந்திரனை தொட்டது யார் நீதானா அது நீதானா
சத்தியமாய் தொட்டவனும் நீதானா அது நீதானா
நெருங்கி தொட்டவனே நிலவு நான் தானோ உன் நிலவு நான் தானோ

பூக்களை செடி கொடியின் பொருள் என்று நினைத்திருந்தேன்
பூவை உன்னை பார்த்த பின்னே பூக்களின் மொழி அறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனை பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றல் என்று மாறி விட்டேன்
கருங்கல்லை போன்றவன் நான் கற்பூரமாகி விட்டேன்

தாமரை மலர் கொண்டு உடல் செய்த ஓவியமே
என் உடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும்சுமப்பிதிலே நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்து விட்டோம் தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக ஏளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை