Showing posts with label Thirudiya idhayathai. Show all posts
Showing posts with label Thirudiya idhayathai. Show all posts

Friday, September 26, 2014

திருடிய இதயத்தை - Thirudiya idhayathai

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா 
 வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா 

சிரிக்கிற சிரிப்பை நிறுத்தி விடு 
பார்க்கிற பார்வையை மறந்து விடு 
பேசுற பேச்சை நிறுத்தி விடு 
பெண்ணே என்னை மறந்து விடு
உயிரே மறந்து விடு உறவே மறந்து விடு
அன்பே விலகி விடு என்னை வாழ விடு (திருடிய இதயத்தை...)

கண்கள் மோதலால் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசித்தூரலாய் நீ பேசு காதலா தவித்தேனே  நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள் 
நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வார்த்தை சொல் 
மன்னவனே மன்னவனே உயிரில் உயிராய் கலந்தவனே (திருடிய இதயத்தை...)

நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசுல நான் ஏதோ நெனப்புல துடித்தேனே நான் துடித்தேனே 
இதயத்தோடு இதயம் சேர்த்து ஒரு முறையாவது பூட்டிக்கொள் 
கண்களோடு கண்கள் வைத்து ஒரு முறையாவது பார்த்துக்கொள் 
காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே (திருடிய இதயத்தை...)