Tuesday, June 30, 2015

செந்தாழம் பூவில் - senthaazham poovil

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா 
பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா 
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் 

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ 
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ 
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது 
ஆசை குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் 
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் 
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் 
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை 
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை 
ஓடை தரும் வாடைக்காற்று வான் உலகை காட்டுது 
உள்ளே வரும் வெள்ளமொன்று ஏங்கோ என்னை கூட்டுது 
மறவேன் மறவேன் அற்புத காட்சி