Friday, June 14, 2013

குயில் பாட்டு - Kuyil paatu o vanthathenna

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான்தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளிக் கொடுப்பேன்
மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் ஆனதென்று மோக கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே

ஒரு தெய்வம் தந்த பூவே - Oru dheiyvam thantha poove

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே

கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே ஸ்வாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ

காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ (2)
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ (2)
மரணம் ஈன்ற ஜனனம் நீ -- (ஒரு தெய்வம்)

எனது செல்வம் நீ எனது வறுமை நீ

இழைத்த கவிதை நீ எழுத்து பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ -- (ஒரு தெய்வம்)