Tuesday, June 30, 2015

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - brindavanamum nandakumaranum

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 
யாவருக்கும் பொது செல்வமன்றோ 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ 

புல்லாங்குழலிசை இனிமையினாலே 
உள்ளமே ஜில்லென துள்ளாதா 
ராகத்திலே அனுராகமவினால் 
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா 

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் 
தன்னையே மறந்திட செய்யாதா 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ