Tuesday, June 30, 2015

சங்கீத ஜாதி முல்லை - sangeetha jaathi mullai

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை 
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை 
சாவொன்று தானா நம் காதல் எல்லை 
என் நாதமே வா....

திருமுகம் வந்து பழகுமோ 
அறிமுகம் செய்து விலகுமோ 
விழிகளில் துளிகள் வடியுமோ - அது 
சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி 
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது 
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது 
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி 
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் 
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ 

ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ 
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் 
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே 
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே 
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் 
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் 
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் 
தத்திச் செல்லும் முத்து சிற்பம் 
கண்ணுக்குள்ளே கண்ணீர்  வெப்பம் 
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ 
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....