Saturday, May 30, 2015

அதோ மேக ஊர்வலம் - adho mega oorvalam

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உத்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உன்னை சேர்த்தேன் வா

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு
நடக்கும் பொது துடித்தது எனது நெஞ்சு 
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் 
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம் 
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே 
ஆடை என்ன வேண்டுமா 
நாணம் என்ன வா வா  -- (அதோ மேக ஊர்வலம்)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் 
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும் 
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே சிந்து மல்லிகை
உன்னை செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் 
காதல் பிச்சை வாங்குவான் 
இன்னும் என்ன சொல்ல -- (அதோ மேக ஊர்வலம்)

ஆகாய வெண்ணிலாவே - aagaya vaennilaave

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ 
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ 
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட 
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட 

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று 
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று 
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு 
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று 
இளநீரு பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும் 
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும் 
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனிதான் ஆட 
நடுஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட -- (ஆகாய வெண்ணிலாவே...)


தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வரூபம் 
ஆதாதிகேசம் எங்கும் ஒளி வீசும் கோவில் தீபம் 
பாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம் 
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும் 
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன 
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன 
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட 
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட -- (ஆகாய வெண்ணிலாவே...)




சின்ன சின்ன தூறல் - chinna chinna thooral

சின்ன சின்ன தூறல் என்ன 
என்னை கொஞ்சும் சாரல் என்ன 
சிந்த சிந்த ஆவல் பின்ன 
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன 

உனது தூறலும் இனிய சாரலும் 
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா 
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் 
ஏதோ ஆசை துளிர்க்குதம்மா 
மனித ஜாதியின் பசியும் தாகமும் 
உன்னால் என்றும் தீருமம்மா 
வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு 
இனமும் குலமும் இருக்கும் உலகில் 
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே -- (சின்ன சின்ன)

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் 
நீயோ இங்கே வருவதில்லை 
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில் 
நீயோ கண்ணில் தெரிவதில்லை 
உனது சேதியை பொழியும் தேதியை 
முன்னால் இங்கே யாரறிவார் 
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும் 
உனது பெருமை உலகம் அறியும் 
இடியெனும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே -- (சின்ன சின்ன)

Thursday, May 28, 2015

மனதிலே ஒரு பாட்டு - manadhile oru paattu

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு 
இது பூபாளம் புது ஆலோலம் விழி பூவும் மலரும் காலை நேரம்

காற்று பூவோடு கூடும் காதல் சங்கீதம் பாடும் 
பார்த்து என்னுள்ளம் தேடும் பாசம் அன்போடு மூடும் 
இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதை பாட்டு -- (2)
இமைகளில் பல தாளம் இசைகளை அது கூறும் 
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும் -- (மனதிலே ஒரு பாட்டு)

நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற 
நானும் பாமாலை போட தோளில் நான் வந்து சூட 
எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊரும் -- (2)
இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் 
இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது -- (மனதிலே ஒரு பாட்டு)

மாலை சூடும் வேளை - maalai soodum velai

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு 

காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ-- (2)
கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே -- (2)
நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம் 
நீண்ட நேரம் தோன்றுமோ -- (மாலை சூடும்)

சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை -- (2)
மாங்கனியாய் நீ குலுங்க ஆன் கிளியாய் நான் நெருங்க-- (2)
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம் 
ஆடை கொண்டு மூடுமோ -- (மாலை சூடும்)



மஞ்ச காட்டு மைனா - manja kaattu maina

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா 
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போன 
காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் வெயிலும் தாக்கும் 
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும் 
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு 
இரவெல்லாம் லாபமே இழப்பது கிடையாது 
மாயனே மாயனே இது மன்மத கதை கேளாய் 
என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை

ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி 
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா 
கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
விட்டு கொடுத்துவிடு ஒரு முறை தான் கல்யாணம் என்பது வேண்டும் -- (மஞ்ச காட்டு)

இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா 
சேலையும் வருந்துது பதவியும் இழந்தது  இடையில் தேர்தலினால் 
கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து இந்த விறுவிறுப்பு பெண் நாணம் சொல்லுது பாரு -- (மஞ்ச காட்டு)

குச்சி குச்சி ராக்கம்மா - kuchi kuchi raakkamma

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் 
கூடசாலி பொண்ணு வேணும் 
சாதி சனம் தூங்கையிலே சாம கோழி கூவையிலே 

குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா 
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா 
சாதி சனம் தூங்கலையே சாம கோழி கூவலையே

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும் 
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் அப்பனுக்கு பெண் பிடிக்கும் 
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்கு பால் பிடிக்கும் 
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும் 

அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் 
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும் ஆனந்த பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
பொட்டைபுள்ள பெத்துக் குடு போதும் என்னை விட்டு விடு
விளக்கை எரிய விட்டு வெட்கத்தை அணைத்து விடு -- (குச்சி குச்சி)

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபம் இல்லை 
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை 
உடலை நீங்கினால் உயிரும் இல்லை ஒலியை நீங்கினால் மொழியுமில்லை 
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை 

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை 
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை 
பொத்தி வெச்ச ஆசை வந்து நெத்தியில துடிக்குது 
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு -- (குச்சி குச்சி)


ரோஜா மலரே ராஜகுமாரி - roja malare raajakumari

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா 
வருவதும் சரிதானா உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ 
வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ (2)
மன்னவர் நாடும் மணிமுடியும்  மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும்  குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ  (2) -- (ரோஜா மலரே)

பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் 

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன் 
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
 

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா - roja roja roja roja

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன் 

அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன் 
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் 

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் 
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன் 
உடையென எடுத்து எனை உடுத்து 
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டில் ரோஜாக்கள் பூக்கின்றன 
ஓர் நாள் உனைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியுமென் வானமே 
மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும் 
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் 
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா -- (ரோஜா ரோஜா)


இளையவளின் இடையொரு நூலகம் 
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் 
இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம்
ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன 
என்னை தீண்ட கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் 
என்னை ஏந்தக் கூடாதென கையேடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கரைகளும் நீங்குமே 
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே 
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா -- (ரோஜா ரோஜா)

என் கண்ணைப் பிடிங்கிக்கொள் - en kannai pidingikoll

என் கண்ணைப் பிடிங்கிக்கொள் பெண்ணே 
எனை காதல் குருடன் ஆக்கி விடு 
உன்னை மட்டும் கண்டு கொள்ள 
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு 
யானை தடவும் குருடன் கதை போல 
தடவி தடவி உன்னை பார்ப்பேனே 

சிற்பம் போல இந்த உடல் நான் தொட்டு பார்த்ததும் குழைகிறதே 
எங்கே எங்கே உந்தன் இடை தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கலேயே 

கோடி கோடியாய் பெண் கூட்டம் கடந்து போய்வரும் வீதியிலே 
இதயம் உனக்கு முன்னால் படுத்து மறியல் பண்ணுதே
கூந்தல் சாட்டையை சுழட்டுகிறாய் கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய் 
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோன்றுதே 
அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே பெண்ணே உந்தன் காதலாலே 
வா வா வா வந்து தீண்டி விடு -- (என் கண்ணைப்)

காதல் என்பது வன்முறையா கண்கள் தான் அதன் செய்முறையா 
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே 
பெண்மை என்பது எரிமலையா பூவில் சிந்திடும் பனிமலையா 
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வளையுதே
மனமின்று பொம்மயானதே பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையாட்டுதே உன்னைக்கண்டு ஆசையாலே 
வா வா வா வந்து விளையாடு -- (என் கண்ணைப்)