Saturday, May 18, 2013

சந்தைக்கு வந்த கிளி - Sandhaikku vantha kili

Sandhaiku vantha kili சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில மல்லிகைப்பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே கைதேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிக்கொள்ளு மாமா

சந்தைக்கு வந்த மச்சான் சாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்த பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆளான நாள் முதலாய் உன்னதான் நான் நெனச்சேன்
நூலாக தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே என் மனச நீ முடிச்ச
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசுரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா

சொர்கமே என்றாலும் - Sorgame Endraalum

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்க ஏதும் கேக்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பாக்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சு துப்ப ஒரு வழி இல்லையே
ஒடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

மாடு கண்ணு மேய்க்க மேயுறத பாக்க மந்தவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரசமர மேடையில்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூர போல ஊரும் இல்ல

ஊரு விட்டு ஊரு வந்து - Ooru vittu ooru vanthu

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலேதும் நடக்கலையா
வீட்டையும் மறந்து விட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சி கோடி வாசனை பட வேணும்
வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
கன்னிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது