Thursday, July 24, 2014

ஆசைய காத்துல - Aasaiya kaaththula

ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாட பட்டு 
சேதிய கேட்டொரு சாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு 
குயில் கேக்குது பாட்ட நின்னு 

வாசம் பூ வாசம் வாலிப காலத்து நேசம் 
மாசம் தை மாசம் மல்லிய பூ மணம் வீசும் 
நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது 
பிஞ்சும் வாடுது வாடையில 
கொஞ்சும் சாடைய போடுது பார்வையில் 
சொந்தம் தேடுது மேடையில 

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது மானு 
மானு பொன் மானு தேயில தோட்டத்து மானு 
ஓடி வர உன்னை தேடி வர தாழம்பூவுல தாவுற காத்துல 
தாகம் ஏறுது ஆசையில 
பாக்கும் போதுல ஏக்கம் தீரல 
தேகம் வாடுது பேசையில 

நான் பேச நினைப்பதெல்லாம் - Naan pesa ninaipathaellaam

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் 
மடி மீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் (நான் பேச..)

சொல்லென்றும் மொழியென்றும் பொருள்  என்றும் இல்லை பொருள்  என்றும் இல்லை 
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை 
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே 
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை (நான் பேச..) 

Friday, July 18, 2014

தேனே தென்பாண்டி மீனே - Thaenae thenpaandi meenae

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே 
மானே இளமானே 
நீதான் செந்தாமரை ஆரிராரோ 
நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ 

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே 
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே 
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம் 
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் 
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை  (தேனே தென்பாண்டி மீனே...)

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயல 
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே 
பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டுப் போகுமா 
தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா 
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை (தேனே தென்பாண்டி மீனே...)

தென்றல் தான் திங்கள் தான் - Thendral thaan thingal thaan

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் 
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம் 
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட 
நெஞ்சோடு தான் வா வா வா கூட 

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம் 
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற 
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர 
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை 
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது 
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது 
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும் 
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும் 
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை 
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)


சங்கீத ஸ்வரங்கள் - Sangeetha swarangal

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் 
நெஞ்சில் என்னவோ நெனச்சேன் 
நானும்தான் நெனச்சேன் 
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும் 
யோசனை வரல 
தூங்கினா விளங்கும் 
தூக்கந்தான் வரல 
பாடுறேன் மெதுவா உறங்கு 

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா 

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்  இன்று தான் வந்தது 
சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி 
தேன்மழை பொழிய பூவுடல் நனைய 
காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகந்தான் 



நேத்து ஒருத்தர ஒருத்தரு - Naethu oruthara orutharu


நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து குளிர் காத்து
கூத்து என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுதான்
இணைஞ்சதொரு கூட்டுதான்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பலநாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்
மாசி மாத்தி தரும் மனசு வெச்சு மாலை போட வரும்
பூத்தது பூத்தது பார்வை போர்த்துது போர்த்துது போர்வை
பாத்தது தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ
போட்டா கணை போட்டா 
கேட்டா பதில் கேட்டா 
வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற… 


பாட்டுத்தான்ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 
இணைஞ்சதொரு...கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு 
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு 
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே 
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே 
பாட்டொரு பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு 
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிடலாச்சு 
பாத்து வழி பாத்து 
சேத்து ஒன்ன சேத்து 
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது 

பாட்டுத்தான்ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் 
தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 

இணைஞ்சதொரு...கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

உன் பார்வையில் ஓராயிரம் - Un paarvayil oraayiram

உன் பார்வையில் ஓராயிரம்  கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்


அசைத்து இசைத்தது வளைக்கரம் தான் 
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான் 
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான் 

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் 
மனதை மயிலிடம் இழந்தேனே 
மயங்கி தினம் தினம் விழுந்தேனே 
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ (உன் பார்வையில்...)

அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன் 
மறைத்த முகத்திரை திறப்பாயோ 
திறந்து அகச்சிறை இருப்பாயோ 
இருந்து விருந்து  மனம் இணைய (உன் பார்வையில்...)

Thursday, July 10, 2014

மானின் இரு கண்கள் - Maanin iru kangal

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே 
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே 
உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வா வா 
வஞ்சி என்றும் வள்ளலல்லவா காதல் 
மல்லிகை வண்டாட்டம் தான் 
போடு நீ கொண்டாட்டம் தான் 

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து 
வக்கணையாய் நான் தொடுத்து 
வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க 

வைகுழலில் பூ முடித்து மங்கலமாய் பொட்டு வைத்து 
மெய்யணைக்க கையணைக்க 
மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க 

இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத்தொடக் கூடாதா
உன்னைத்தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா 
முன்னழகும் பின்னழகும் ஆட 
இளமை ஒரு முத்திரையை வைப்பதற்கும் வாட 
மயக்கும் இள -- (மானின் இரு)

ஊசியிலை காடிருக்க உச்சிமலை மேடிருக்க 
பச்சக்கிளி கூடிருக்க பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு 
புல்வெளியில் மெத்தையிட்டு மெத்தையிலே உன்னையிட்டு 
சத்தமிட்டு முத்தமிட உத்தரவு இட்டுவிடு நீயெனக்கு 
அந்திபகல் மோகம் வந்து அங்கும் இங்கும் போராட 
எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக 
செங்கரும்பு சாரெடுக்கத்தானே உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே 
மயக்கும் இள -- (மானின் இரு)

Tuesday, July 8, 2014

கண்ணாலே மிய்யா மிய்யா - Kannale miya miya

கண்ணாலே மிய்யா மிய்யா 
கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா 
நீ இல்லாமையா நீலயாமையா 

காதலால் சொக்கி பையா 
இனிக்குமே  உந்தன் கையா 
இதழின் ஓரம் தேவையா 

பாதி கண்கள் மூடும் 
மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் உன்னை பார்க்கும் அல்லோ 
பார்வை தப்பும் நேரம் 
நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசுமல்லோ 
முதல் முதல் ஏழுதும் 
தேர்வின் பயம் தான் 
உயிரினில் நுழையும் நேரம் இதுதான் 
ஹே கொஞ்சம் சும்மா இரு 
பக்கம் வந்தால் வம்பா இது

இமை ஒட்டிக்கொள்ளும் 
இதழ் திட்டித்தள்ளும் 
நிழல் கட்டிக்கொள்ளும் 
ஒரே நிழல் மிஞ்சும் -- (கண்ணாலே மிய்யா)

தீயை தின்னும் நேரம் 
தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 
காமம் கட்டில் ஆடும் 
மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக்கொள்ள கூடுமல்லோ 
தலையணை முழுதும் ஓ கூந்தல் அலைதான் 
இருபது விரலும் ஹோய் தீயின் கிளைதான் 
ஹேய் என்னை தீண்டாதிரு 
பக்கம் வந்தால் தள்ளாதிரு 

கண்கள் ரெண்டும் பள்ளம் 
வேர்வை கொட்டி வெள்ளம் 
கட்டில் வெட்கம் செல்லும் 
ஒரே நிழல் மிஞ்சும்  -- (கண்ணாலே மிய்யா)