Wednesday, September 7, 2011

ஆடியில சேதி - Aadiyile sethi solli

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வெச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

சேல மேல சேல வெச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊறு மெச்ச கைப்பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கந்தான்
ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கந்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடி தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்