Saturday, June 13, 2015

பூவே செம்பூவே - poove semboove

பூவே செம்பூவே உன் வாசம் வரும் 
வாசம் உன் வாசம் என் பூங்காவனம் 
வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் 
 
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் 
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும் 
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது 
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே 
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே 
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே 

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே 
மலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை தானே 
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை 
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை 
நான் செய்த பாவம் என்னோடு போகும் 
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் 
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே