Saturday, June 13, 2015

நின்னுகோரி வர்ணம் - ninnukori varanam

நின்னுகோரி வர்ணம் இசைத்திட என்னை தேடி வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க 
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க 
அழகிய ரகுவரனே அனுதினமும்

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க 
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க 
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க 
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னை தேடுது 
ஆசை நெஞ்சு ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது 
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் 

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு 
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு 
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும் 
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் 
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம் 
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் 
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தியாகக் கொதிக்குது