Saturday, June 13, 2015

பூங்குயில் பாட்டு - poonguyil paatu

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா 
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா 
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா 
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு 

ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவு பிடிச்சிருக்கா 
கண்கள் திறந்து தினம் காத்து கிடந்தேன் என்ன கண்டு கொள்ள மனசிருக்கா 
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வெச்சது நினைப்பிருக்கா 
மேகம் போட்டு மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசிச்சது பிடிச்சிருக்கா 
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நாம நனைஞ்சது நினைப்பிருக்கா 
திறந்திருக்கிற மனசுக்குளே திருடி சென்றது பிடிச்சிருக்கா
வாசம் பூவும் பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு