Wednesday, July 8, 2015

மயக்கம் எனது தாயகம் - mayakkam enathu thaayagam

மயக்கம் எனது தாயகம் 
மௌனம் எனது தாய்மொழி 
கலக்கம் எனது காவியம் - நான் 
கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறந்த அழகு 
திரை மூடிய சிலை நான் துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான் 

நானே எனக்கு பகையானேன் என் நாடகத்தில் நான் திரையானேன் 
தேனே உனக்கு புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது 

விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான் தான் பாரம்மா 

மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா