Wednesday, July 8, 2015

மாலைபொழுதின் மயக்கத்திலே - maalaipozhuthin mayakkathile

மாலைபொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி 
காரணம் ஏன் தோழி 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி 
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி 

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவுகண்டேன் தோழி 
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி 
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி - அவர் 
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி 
பறந்து விட்டார் தோழி 

கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி 
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி 
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் 
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர் காலம் 
மயங்குது எதிர் காலம்