Thursday, July 16, 2015

கற்பூர பொம்மை - karpoora bommai

கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று 
கலந்தாட கைகோர்க்கும் நேரம் என் கண்ணோடு ஆனந்த ஈரம் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா 

பூந்தேரிலே நீயாடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் 
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் 
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா 

தாயன்பிர்க்கே ஈடாதேம்மா ஆகாயம் கூட அது போதாது 
தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது 
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் சென்தேன்குழல் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா