Tuesday, June 30, 2015

வெள்ளை புறா ஒன்று - vellai pura ondru (patho)

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே 
முதலெழுத்து தாய்மொழியில் தலையெழுத்து யார் மொழியில் 
என் வாழ்க்கை வான்வெளியில் 

பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே 
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே 
தலைவிதி என்னும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை 
கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும் 

நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி 
பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி 
துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேரானதே 
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்