Saturday, June 13, 2015

கண்ணாலே காதல் கவிதை - kannalae kadhal kavithai

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக 
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக 
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் 
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும்பொழுது 
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது 
இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே 
குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணியிலே 
இளமேனி உன் வசமோ 

உனக்கென மணிவாசல் போலே மனதை திறந்தேன் 
மனதுக்குள் ஒரு ஊஞ்சலாடி உலகை மறந்தேன் 
வளையோசைகள் உன் வரவைக் கண்டு இசைக் கூட்டிடும் தன் தலைவன் என்று 
நெடுங்காலங்கள் நம் உறவைக்கண்டு நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு 
இன்ப ஊர்வலம் இதுவோ