Saturday, June 13, 2015

கலைவாணியே - kalaivaaniyae

கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் 
உயிர்த்தீயை வளர்த்தேன் 
வரவேண்டும் வரம் வேண்டும் 
துடித்தேன் தொழுதேன் பல முறை 
நினைத்தேன் அழுதேன் இசை தரும் 

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் 
மடிமீதில் மரித்தேன் மறு ஜென்மம் கொடுத்தாய் 
சிறு விரல்களில் தலை கோதி மடிதனில் என்னை வளர்த்தாய் 
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை பறந்தாய் 
முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய் 
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள் தெறிக்கிறது துடைத்துவிடு -- (கலைவாணியே)

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி 
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி 
ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை இரண்டும் உலகில் சமநீதி 
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி 
கண்ணீர் பெருகியதே ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம் அழகிய நிலவென மிதக்கும் 
உயிரே உயிரின் உயிரே 
அழகே அழகின் அழகே 
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை 
இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய்