Saturday, June 13, 2015

எனக்கொரு சிநேகிதி - enakkoru snegithi

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி 
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி 
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன் 
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் 

மேகமது சேராது வான்மழையும் வாராது 
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே 
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது 
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா 
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும் 
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் 
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் 
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல 
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி 
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு 
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு 
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்