Friday, September 12, 2014

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - Nenje nenje nee engae

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே  நீ எங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய் 
என் தாகங்கள் தீர்க்காமல் ஏன் கடலில் சேர்கிறாய்

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் அற்றுப் போனேனே
வெயில்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு நேரம் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)

கள்வா ஏ கள்வா  நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டுப் போகாதே
காற்று நம் பூமி அதை விட்டுப் போகாதே
ஆகாயம் நிறம் மாறிப் போனால் போகட்டும்
ஆனால் நீ மனம்மாறிப் போகக்கூடாது 

ஏ மச்சத்தாமரையே என் உச்சத்தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாது (நெஞ்சே நெஞ்சே...)