Friday, September 26, 2014

என்ன இதுவோ என்னை - Enna idhuvo ennai

என்ன  இதுவோ என்னை சுற்றியே  புதிதாய் ஒரு வட்டம் 
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் 
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் அதே சுகம் 
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி 
உன் கண்களோடு இனி மோதல் தானடி 

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே 
கண்களால் சுவாசிக்க கற்றுத் தந்தது 
பூமியே சுழல்வதாய் பள்ளிப் பாடம்  சொன்னது 
இன்று  தான்  என் மனம் ஏற்றுக்கொண்டது 
ஓ காதலி என் தலையணை நீயென நினைத்துக்கொள்வேன்  
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக்கொள்வேன் 
கோடை காலப் பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய் 
 
புத்தகம்  புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் 
பூமியில் வாழ்ந்ததாய் இல்லை ஞாபகம் 
கோவிலின் வாசலில் உன் சிரிப்பை தேடுவேன் 
கண்டதும் நொடியிலே பக்தனாகுவேன் 
ஓ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் 
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் 
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா