Friday, September 26, 2014

காக்கை சிறகினிலே - Kaakkai siraginilae

காக்கை சிறகினிலே நந்தலாலா 
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா 

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா 
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா  (காக்கை சிறகினிலே...)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா 
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா  (காக்கை சிறகினிலே...)

தீக்குள்விரலை வைத்தால் நந்தலாலா 
நின்னை தீண்டும் இன்பம் தேன்றுதடா நந்தலாலா (காக்கை சிறகினிலே...)