Saturday, May 18, 2013

சந்தைக்கு வந்த கிளி - Sandhaikku vantha kili

Sandhaiku vantha kili சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில மல்லிகைப்பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே கைதேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிக்கொள்ளு மாமா

சந்தைக்கு வந்த மச்சான் சாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்த பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆளான நாள் முதலாய் உன்னதான் நான் நெனச்சேன்
நூலாக தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே என் மனச நீ முடிச்ச
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசுரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா