Sunday, September 30, 2012

வராது வந்த நாயகன் - Varaadhu vantha naayagan

முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம் 
கலாதரா வதம் சகம் விலாசி லோக ரக்ஷகம் 
அநாயகைக்க நாயகம் விநாசிதேப்ரதைத்யகம் 
நதா சுபாஷு நாசகம் நமாமிதம் விநாயகம்
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம் 

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் 
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன் 
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் 
இவன் தலைவி நாயகன் 

தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம் 
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம் 
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம் 
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம் 
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம் 
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும் 
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும் 
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் பூவனம் 
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம் 
இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம் 
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம் 
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்