Monday, July 13, 2015

பூ மாலை வாங்கி வந்தான் - poomaalai vaangi vanthaan

பூ மாலை வாங்கி வந்தான்  - தினம் தினம் 
பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு 
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு 
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது 

கையில் கிண்ணம் பிடித்து விட்டான் 
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான் 
ராகம் தாளம் மறந்துவிட்டான் 
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான் 
கடற்கரை எங்கும் மணல்வெளியில் 
காதலி காலடி தேடினான் 
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான் 
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான் 
போதையினால் புகழ் இழந்தான் 
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட 

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான் 
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான் 
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் 
இருமலைத்தான் இன்று சுரம் பிரித்தான் 
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் 
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான் 
போதையின் பாதையில் போகின்றான் 
தன் முகமே தான் மறந்தான் 
சூடவும் தோளில்லை ஆளில்லை