Thursday, July 16, 2015

பனி விழும் இரவு - pani vizhum iravu

பனி விழும் இரவு 
நனைந்தது நிலவு 
இளங்குயில் இரண்டு 
இசைக்கின்ற பொழுது 
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது 
வா வா வா 

பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க 
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க 
மாலை விளக்கேற்றும் நேரம் 
மனசில் ஒரு கோடி பாரம் 
தனித்து வாழ்ந்தேன்ன லாபம்
தேவையில்லாத தாபம்  
தனிமையே போ இனிமையே வா 
நீரும் வேரும் சேர வேண்டும் 

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது 
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது 
ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் 
என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் 
விரகமே ஓ நரகமோ சொல் 
பூவும் முள்ளாய் மாறிப்போகும்