Friday, July 17, 2015

நிலவு தூங்கும் நேரம் - nilavu thoongum neram

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர்பிறை

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே 
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே 
நானுனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் 
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் 
நான் இனி நீ நீ இனி நான் 
வாழ்வோம் வா கண்ணே 

கீதை போல காதல் மிக புனிதமானது 
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது 
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் 
வாலிபம் தென்றலாய் என்றுமிங்கு வீசும் 
ஏன் மயக்கம் ஏன் தயக்கம் 
கண்ணே வா இங்கே