Tuesday, June 30, 2015

வான் மேகம் - vaan megam

வான் மேகம் பூப்பூவாய் தூவும் 
தேகம் என்னவாகும் 
இன்பமாக நோகும் 
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளிர்த்தது 
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது 
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது 
காதல் வென்றது 
மேகம் வந்தது 
பூக்கள் சிந்துது 
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க 

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ 
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ 
அவன் விழி அசைத்ததில் இவள் மனம் அசைந்ததோ 
தளிர்க்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ 
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடை ஆனதோ 
பாடல் பாடுதோ தூறல் போடுதோ தோகை ஆடுதோ
பூமி எங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்