Wednesday, June 17, 2015

அழகிய மிதிலை - azhagiya mithilai

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் 
பாதையை அவள் பார்த்திருந்தாள் 

காவிய கண்ணகி இதயத்திலே 
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே 
கோவலன் என்பதை ஊரறியும் 
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்  -- (அழகிய மிதிலை)

பருவத்து பெண்கள் தனித்திருந்தால் 
பார்ப்பவர் மனதில் என்ன வரும் 
இளையவர் என்றால் ஆசை வரும் 
முதியவர் என்றால் பாசம் வரும் -- (அழகிய மிதிலை)

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் 
உள்ளத்தை நன்றாய் புரிந்துகொண்டால் 
இருவர் என்பது மாறி விடும் 
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும் -- (அழகிய மிதிலை)