Tuesday, April 30, 2013

போறாளே பொன்னுத்தாயி - Poraale ponnuthaayi

போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத்தொட்டு
தர பாக்கும் கருதப் போல வெக்கப்பட்டு
போறாளே பொன்னுத்தாயி புழுதிக்காட்டுல மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப்பட்டு

வெள்ளாமை நீதான் வெள்ளாடு நான்தான்
வெக்கத்த விட்டுத்தள்ளம்மா
வெள்ளாமை காட்ட விட்டுத்தரமாட்டா
பண்பாடு கட்டிக்காக்கும் பட்டிக்காட்டு கருத்தம்மா

படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள
இவளது நாக்கில போக்கில மனசில கள்ளமில்ல
உம்மேல கிறுக்கு உள்ளூர இருக்கு
வாய் விட்டு சொல்ல தானே தோது இல்ல தோது இல்ல
வைகைக்கு கடல சேர யோகமில்ல யோகமில்ல
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல

நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்
அடி போடிக் கள்ளி நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுரக் கட்டி கொல்லுறியே கொல்லுறியே
வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே