Saturday, April 20, 2013

ராஜாவின் பார்வை - Raajaavin paarvai

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட தணிந்தேன்