Saturday, September 1, 2012

ஒரு காதல் தேவதை - Oru kaadhal devathai

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் 
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா 
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லலையா 
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா 
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா 
ஓடோடி வந்ததால் உள் மூச்சும் வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது 
ஒன்றானது 

யாருக்கு யாருறவு யாரறிவாரோ 
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ 
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ 
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ 
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது 
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது 
இயல்பானது