Saturday, April 27, 2013

கோழி கூவும் நேரம் ஆச்சு - Kozhi koovum neram aachu

வந்தேன் வந்தேன் வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை ஒன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது ஏன் அதில் இன்று
அழகான மணவாளன் காதலின் வசமானாள்
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்
இரவெல்லாம் முதலிரவாக அவர் வாழும் ஒரு நாள் காலையில்
துயில் மேவும் அவள் மணவாளன் தனை மங்கை எழுப்புகின்றாள்

கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம் சொல்லிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி ரெண்டும் உறங்காம சொருகுது சொருகுது

ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள் அம்மா
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே
நெத்திலி மீனே மைவிழி மானே நெஞ்சிலே சாச்சுக்கோ
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

எப்போதும் மீனுண்டு கடலில தான் காதலியே
கடல் எங்கே போய் விடும் சொல்லு
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

காதலி சொன்னது வேதம் என்று
புயல் வரும் வேளையில் அவன் போனான்
இந்திய எல்லையை தாண்டும் போது
பாவிகள் சுட்டதில் பலியானான்
காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்
எனினும் அவள் மனம் நம்பாது
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே தனிமையில் ஆடி சிலையானாள்

Monday, April 22, 2013

சந்திரனை தொட்டது - Chandiranai thottadhu yaar

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான் தானே அடி நான் தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான் தானே

சந்திரனை தொட்டது யார் நீதானா அது நீதானா
சத்தியமாய் தொட்டவனும் நீதானா அது நீதானா
நெருங்கி தொட்டவனே நிலவு நான் தானோ உன் நிலவு நான் தானோ

பூக்களை செடி கொடியின் பொருள் என்று நினைத்திருந்தேன்
பூவை உன்னை பார்த்த பின்னே பூக்களின் மொழி அறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனை பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றல் என்று மாறி விட்டேன்
கருங்கல்லை போன்றவன் நான் கற்பூரமாகி விட்டேன்

தாமரை மலர் கொண்டு உடல் செய்த ஓவியமே
என் உடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும்சுமப்பிதிலே நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்து விட்டோம் தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக ஏளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை

வா வெண்ணிலா - Vaa vennilla

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஹா ஹா திருமுகம் காணும்
வரம் தர வேணும் ஹே ஹே எனக்கது போதும்
எனை சேர எதிர் பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையேன நானும்
இணைபிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்

Sunday, April 21, 2013

என்னுள்ளே என்னுள்ளே - Ennulle ennulle

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆலிலையில் அரங்கேற 
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

சொல்லிவிடு வெள்ளி நிலவே - Sollividu vellinilave

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை ஓ வேதனை தீரவில்லை

தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் காதல் ஓ
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல்
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா

Saturday, April 20, 2013

ராஜாவின் பார்வை - Raajaavin paarvai

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட தணிந்தேன்

நாணமோ இன்னும் நாணமோ - Naanamo innum naanamo

நாணமோ இன்னும் நாணமோ 
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன 
நாணமோ நாணமோ

நாணுமோ இன்னும் நாணுமோ 

தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ

தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவதுகாதலி கண்களை மூடுவது
அது எது

மாலையில் காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலேமலர் செண்டாவது
கானலில் நீரினில் ஆடிடும் வேளையில் காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது

உண்டால் மயக்கும் கள்ளாவது

அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் நாடுவது ஞானியின் கண்களும் தேடுவது
அது எது