Showing posts with label அந்தி மழை பொழிகிறது. Show all posts
Showing posts with label அந்தி மழை பொழிகிறது. Show all posts

Saturday, June 13, 2015

அந்தி மழை பொழிகிறது - andhi mazhai pozhigirathu

அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே 

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது 
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய் 
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றாய் 
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கேட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே 

தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது 
நெஞ்சு பொறு கொஞ்சம இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் 
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
 
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே