Showing posts with label vannam konda vaennilave. Show all posts
Showing posts with label vannam konda vaennilave. Show all posts

Tuesday, June 30, 2015

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - vannam konda vaennilave

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ 
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை 

பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரமில்லை 
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கும் ஞானம் இல்லை 
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை 
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் 
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி 
கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால்கடுக்க காத்திருப்பேன் 
ஜீவன் சேரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் 
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்